பன்றிக் காய்ச்சலைப் பரப்பும் மாயனூர் வாரச் சந்தை...!
கரூர்: சமூக விரோதிகளின் கூடாரமாகவும், பன்றிக்காய்ச்சல் உருவாகும் மையமாகவும் விளங்குகிறது கரூர் மாவட்டம் மாயனூர் வாரச் சந்தை.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள மாயனூர் பகுதியில் வாரா வாரம் திங்கள் அன்று வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே 18 பட்டி கிராம மக்கள் பயன் பெறும் வகையில் திங்களன்று வாரம், வாரம் நடைபெறும் சந்தையில் காய்கறிகள், கிழங்கு, மளிகை பொருட்கள், கீரை வகைகள், கருவாடு உள்ளிட்ட வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் விற்பனையாகும்.

இச்சந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே இருபுறமும், கம்பி கேட், சந்தையை சுற்றிலும் மதில் சுவர் எழுப்பபட்டு மிகவும் பாதுகாப்புடனும், சுகாதாரத்துடனும் காணப்பட்டது. ஆனால் தற்போது வார சந்தையில் ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மிகப்பெரிய கழிப்பிடத்தை கட்டி வைத்ததோடு, அதை பயன்படுத்தாமல் பூட்டி கிடப்பது ஒரு புறம் இருக்க, இந்த வார சந்தையில் சுற்றுச்சுவர் பல பகுதியில் முழுவதும். பொதுமக்கள் ஆக்கிரமிப்போடு காணப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் சுற்றித்திரியும் பன்றிகளின் வளர்ப்பிடமாகவும், நாடோடிகள், பிச்சைக்காரர்கள், சமூக விரோதிகள், தங்குமிடமாகவும் தற்போது காணப்படுகிறது. அகன்ற இடத்தில் இருந்த வாரச் சந்தை தற்போது குறுகி சாலை சந்தை போல் காட்சியளிகிறது.
ஆனால் தற்போது வாரச் சந்தை போல இல்லாமல் பன்றிக்காய்ச்சல் பரவும் சந்தையாக, டெங்கு காய்ச்சலை உருவாக்குமிடமாக, சமூக விரோதிகளின் கூடாரமாகவும் திகழ்கிறது.

தமிழகத்திலேயே மைய பகுதியில் இருப்பதால்தான் இந்த ஊருக்கு மையனூர் என்ற பெயர் வந்தது. பின்னர் அது காலப் போக்கில் மாயனூர் என்றானது என்பது வரலாறாகும். இப்படி பட்ட தமிழகத்தின் மைய பகுதியே சுகாதார துறை சீர்கேட்டிலும், சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்குவது குறித்து அரசு நிர்வாகம் கவனம் கொண்டால் நல்லது என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications