வெள்ளத்தில் தொலைந்த சான்றிதல்களைப் பெற்றுத்தர காவல் உதவி மையம் திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பெய்த கனமழை காரணமாக அடையாறில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், கரையோரம் உள்ள கோட்டூர்புரம், சித்ரா நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கோட்டூர்புரம் கார்டன் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
தற்போது வெள்ளம் வடியத்தொடங்கிய நிலையில், காணாமல் போன கல்விச் சான்றிதல்கள், பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை திரும்பப்பெற்றுத்தர உதவும் வகையில் கோட்டூர்புரம் விநாயகர் கோயில் அருகே காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இங்கு, ஆவணங்கள் மட்டுமின்றி, காணாமல் போன வளர்ப்புப் பிராணிகளை கண்டறிவதற்கும் புகார்கள் பெறப்படுகிறது.
மேலும், அந்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்வை, பாய், பால் பவுடர், துடைப்பம்,வாளி உள்ளிட்ட பொருட்களை துணை ஆணையர் வழங்கினார்.












Click it and Unblock the Notifications