இந்தியை திணிக்க முற்பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும்: வைகோ எச்சரிக்கை!
சென்னை: இந்தியாவின் ஆட்சிமொழி, அலுவல் மொழி என்று இந்தியைத் திணிக்க முற்பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
நரேந்திர மோடி தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் அரசு அமைந்த பிறகு இந்தி மொழித் திணிப்பை தீவிரப்படுத்துவதுபோல, மத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன.
சமூக வலைதளங்களில் இந்தி மொழியில் பதிவுகள் இட வேண்டும் என்ற உத்தரவு, ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு, சமசுகிருத வாரம் கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் ஆகியவை மொழிப் பிரச்னையில் மத்திய அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்தியது.

ஆட்சிமொழி இந்தி
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஆட்சிமொழி அலுவல்துறை எல்லா வகையிலும் இந்தி மொழியைத் திணிப்பதற்கு மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறது.

கல்லூரிகளில் இந்தி
இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும், பட்டப் படிப்புகளில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியையும் முதன்மைப் பாடமாக கற்றுத்தர வேண்டும் என்றும், சட்டம் மற்றும் வணிகவியல் பாடங்கள் இந்தி வழியில் நடத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகத்தின் ஆட்சிமொழி அலுவல் துறை சார்பில் சுற்றறிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

ஊழியர்கள் இந்தி
இதுமட்டுமின்றி, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே துறை, பொதுக்காப்பீட்டுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் இந்தி மொழியை கட்டாயமாக பயில வேண்டும்; சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் இந்தி மொழியில் வெளியிட வேண்டும்; ஆட்சி மொழியாக அனைத்துத் துறைகளிலும் இந்தி பயன்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

100 சதவிகிதம் இந்தி
தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி. நிறுவனம், பாரத மிகுமின் நிறுவனம் போன்ற பொதுத் துறை நிறுவனங்களில் நூறு சதவிகிதம் இந்தி மொழி பயன்பாடு என்பது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டம்
தமிழ்நாட்டில் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டம் 75 ஆண்டு கால வரலாறு உடையது என்பதை மத்திய அரசு மறந்துவிட முடியாது. இந்தியத் துணைக் கண்டத்தில், இந்தி மொழித் திணிப்பிற்கு எதிராக நாட்டு விடுதலைக்கு முன்பாகவே 1938 ஆம் ஆண்டிலிருந்து திராவிட இயக்கம் தமிழகத்தில் கடுமையாகப் போராடி வருகிறது. 1965இல் இந்திய இராணுவத்தை தமிழ்நாட்டு வீதிகளில் இளைஞர்களும், மாணவர்களும் சந்திக்கின்ற அளவுக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நாட்டையே உலுக்கியது.

சம வாய்ப்பு தேவை
இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு அளிக்கப்பட்டால்தான் வேற்றுமையில் ஒற்றுமையும், தேசிய ஒருமைப்பாடும் நிலைக்கும். இந்தி மொழிக்கு கொடுக்கப்பட்டுள்ள அரசியல் சாசன ஆட்சிமொழி அங்கீகாரம் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.

விபரீத விளைவுகள்
மாறாக மத்திய அரசு அதிகாரத் துணைகொண்டு, இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி, அலுவல் மொழி என்று இந்தியைத் திணிக்க முற்பட்டால், விபரீத விளைவுகள்தான் ஏற்படும் என்பதை உணர வேண்டும். எனவே, மத்திய உள்துறை அமைச்சகம் இந்தி மொழியைத் திணிக்கும் உத்தரவுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications