தூத்துக்குடி: தாத்தாவின் பெருமையை காப்பாரா மதிமுக வேட்பாளர் ஜோயல்?
தூத்துக்குடி: தூத்துக்குடி லோக்சபா தொகுதியின் மதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் வழக்கறிஞர் எஸ். ஜோயல்
தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரம் அருகேயுள்ள லட்சுமி புரத்தில் சாமுவேல் நாடார், - எஸ்தர் தம்பதியினருக்கு 16-03-1973ல் பிறந்தார். சாதாரண விவசாயக்குடும்பத்தில் பிறந்த ஜோயலுக்கு ஒரு அண்ணன்,மூன்று தங்கைகள் உள்ளனர்.
ஜோயலுக்கு மோனிகா என்ற மனைவியும், ஜோஸ்வா (9) அனுஷ்காமல்யா(4) என்ற மகளும் உள்ளனர்.
லட்சுமிபுரம் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்ற ஜோயல், 1991ம் ஆண்டு சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தார். 8ம் வகுப்பு படிக்கும் போதே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
1993ம் ஆண்டு வைகோ திமுகவில் இருந்து வெளியேறி மதிமுகவை தொடங்கிய போது சேலம் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ஜோயல் தன்னை மதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தீவிர விசுவாசியாக இருக்கும் ஜோயல், அவரது ஆலோசனைப் பெற்றே பணியாற்றி வருகிறார்.
எஸ்.ஜோயலின் தாத்தா, சாமுவேல் நாடார், பெருந்தலைவர் காமராஜருடன், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றியவர்.
தமிழகத்தில் 1958ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற போது, தூத்துக்குடி தொகுதியின் முதல் வேட்பாளராக, பெருந்தலைவர் காமராஜரால் களம் இறக்கப்பட்டு வெற்றி பெற்றார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர், கக்கன், வெங்கட்ராமனுடன் இணைந்து பணியாற்றவர் சாமுவேல்நாடார். அவரது பேரனும் தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான வழக்கறிஞர் எஸ். ஜோயல் லோக்சபா தொகுதியின் மதிமுக வேட்பாளராக களம் காண்கிறார். பலமுனைப் போட்டியில் தொகுதியை வெல்வாரா ஜோயல்.