தமிழக எல்லையில் கொட்டப்படும் கேரளாவின் மருத்துவ கழிவுகள் - தொற்றுநோய் அபாயம்
நெல்லையில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அபாய மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நெல்லை: நெல்லை-தூத்துக்குடி நான்கு வழி சாலையில் அபாய மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் தொற்று நோய் பீதியில் அப்பகுதி மக்கள் உறைந்துள்ளனர். இரவோடு இரவாக கேரளாவில் இருந்து வந்து தமிழக எல்லைகளில் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்வதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
நெல்லையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நான்கு வழி சாலையில் அரியகுளம் கல்லூரி முதல் தொடர்ச்சியாக விட்டு விட்டு ஓரே இடத்தில் கொட்டாமல் மருத்துவ கழிவுகள் கிடந்தன.

அபாய மருத்துவக்கழிவுகள்
கலாவதியான மருந்து பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத ஊசிகள், ஊசி மருந்துகள், ரத்தம் தேய்ந்த பஞ்சுகள் உள்ளிட்டவை சாலையோரங்களில் கிடந்தன. இந்த அபாய மருத்துவ கழிவுகள் அனைத்தும் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கு கொட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அழிக்கப்படும் கழிவுகள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், தனியார் மருத்தவமனைகளில் சேரும் மருந்துவ கழிவுகள் சேகரிக்கப்பட்டு வள்ளியூர் அருகே பொத்தையடி பகுதியில் உள்ள தனியார் மூலம் தினமும் பெறப்பட்டு அழிக்கப்படுகின்றன.
கேரளாவின் கழிவுகள்
அனைத்து மருத்துவமனைகளும் இந்த நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இதற்கென தனி வாகனத்தில் வந்து உரிய பாதுகாப்புடன் மருத்துவ கழிவுகளை எடுத்து செல்கின்றனர். இதனால் நான்கு வழி சாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் கேரளாவில் இருந்து தான் வருகிறது என்பது இதனால் உறுதியாகிறது.
குப்பைக்கிடங்கா தமிழகம்
கேரளாவில் இருந்து ஏற்கனவே மாமிச கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள் மற்றும் பல கழிவுகள் கொண்டு வரப்பட்ட போது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஓப்படைத்துள்ளனர். இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட பகுதி நிர்வாக அதிகாரிகள் இத்தகைய லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் இது குறையும் என காட்டமாக தெரிவித்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications