பெண்ணை கீழே தள்ளி விட்ட திருடர்கள்.. தாலி பறித்தபோது தவறி ஜாக்கெட்டுக்குள் விழுந்ததால் ஆத்திரம்
இன்ஸ்பெக்டர் மனைவியின் சங்கிலியை பறிக்க முயன்ற போது சங்கிலி கையில் கிடைக்காததால் அவரை கீழே தள்ளியதில் படுகாயம் அடைந்தார்.
சென்னை: இன்ஸ்பெக்டர் மனைவியின் சங்கிலியை கொள்ளையர்கள் பறிக்க முயன்ற போது செயின் கையில் கிடைக்காத கடுப்பில் கொள்ளையர்கள் அவரை கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்றனர். இதனால் அந்தப் பெண் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கோபாலபுரத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். கஸ்தூரி அருகில் உள்ள பாரத் ஸ்கேன் சென்டரில் பணி புரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் கஸ்தூரி வேலையை முடித்து விட்டு இரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் அவர் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள், கஸ்தூரியின் அருகில் சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அப்போது சங்கிலி அறுந்து அவருடைய ஜாக்கெட்டின் உள்புறமாக விழுந்துவிட்டது. இதனால் கொள்ளையர்களின் கையில் சங்கிலி சிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் கஸ்தூரியை கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த கஸ்தூரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயப்பேட்டை பகுதியில் அடிக்கடி செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்தி இந்தப் பகுதியில் உள்ள பெண்கள் அச்சமின்றி வெளியில் சென்று வரும் வகையில் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி பெண்கள் வலியுறுத்துகின்றனர்.
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications