For Daily Alerts
Just In
பாதியிலேயே நின்ற ஊட்டி மலை ரயில்... சுற்றுலா பயணிகள் அவதி! - வீடியோ
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்குச் செல்லும் ரயில் ரிப்பேராகி பாதியிலேயே நின்றதால், அதில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஊட்டி: மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு செல்லும் மலை ரயில், பாதி வழியிலேயே நின்றதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை மலை ரயில் பலகாலமாக இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் இந்த ரயிலில் செல்வதற்கு மிகுந்த ஆசைப்படுவர்.
ஆனால் இந்த ரயில் ஒருநாளைக்கு சிலமுறை மட்டுமே இயக்கப்படும். ரயிலில் பயணம் செய்துகொண்டே ஊட்டி மலை அழகைப் ரசித்துக்கொண்டு செல்லலாம்.
இந்த மலை ரயில் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி செல்லும் போது ரயிலில் சிக்கல் ஏற்பட்டு பாதியிலேயே நின்றது. அதனால் அதில் பயணம் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
Comments
English summary
Mettupalayam - Conoor mountain rail got repair and stopped on the way. So tourist who traveled in it were in trouble
Story first published: Wednesday, April 26, 2017, 19:01 [IST]