எத்தனை ஆவணம் தாக்கல் செய்தாலும் தினகரனுக்கு கட்சியும், சின்னமும் கிடைக்காது... அமைச்சர் ஜெயக்குமார்
டிடிவி தினகரன் எத்தனை ஆவணங்களை தாக்கல் செய்தாலும் கட்சியும், சின்னமும் கிடைக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் எத்தனை ஆவணங்களைத் தாக்கல் செய்தாலும் கட்சியும், சின்னமும் அவருக்குக் கிடைக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இரட்டை இலை விவகாரம் தொடர்பாக வரும் 6-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணி நேற்று கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 100 சதவீதம் கட்சியும், ஆட்சியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் ஒன்றுபட்டு செயல்படுகிறோம். சின்னமும், கட்சியின் பெயரும் எங்களுக்கே கிடைக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.
தினகரன் தேர்தல் ஆணையத்தில் எத்தனை ஆவணங்களை தாக்கல் செய்தாலும் அவருக்கு கட்சியும், சின்னமும் கிடைக்காது. கட்சியில் இல்லாத ஒருவருக்கு எப்படி சின்னமும், கட்சியின் பெயரும் கிடைக்கும் என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications