1.10 லட்சம் பேருக்கு தேர்வு மையம் ஒதுக்கியபோது 5 ஆயிரம் பேருக்கு ஒதுக்க முடியாதா என்ன?- ஜெயக்குமார்
1.10 லட்சம் பேருக்கு தேர்வு மையம் ஒதுக்கிய போது 5 ஆயிரம் பேருக்கு ஒதுக்க முடியாதா என்ன என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் மொத்தம் 1.15 லட்சம் பேரில் 1.10 லட்சம் பேருக்கு தேர்வு மையம் ஒதுக்கிய எங்களால் மீதமுள்ள 5 ஆயிரம் பேருக்கு ஒதுக்க முடியாதா என்ன என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வு குளறுபடிகள், வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு ஆகியவை குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கும் சிபிஎஸ்இ வாரியத்துக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையத்தை ஒதுக்க வேண்டும் என சிபிஎஸ்இ கேட்டிருந்தால் செய்திருப்போம்.
நீட் தேர்வை குளறுபடி இல்லாமல் நடத்த வேண்டியது சிபிஎஸ்இயின் பொறுப்பு ஆகும். மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரம் பேரில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தமிழகத்தில் நீட் எழுதினர்,
மீதமுள்ள 5 ஆயிரம் பேருக்கு தேர்வு மையம் அமைக்க எங்களால் முடியாதா என்ன. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அவருக்கு சொந்தமான கல்லூரி வளாகத்தில் நீட் தேர்வு மையம் அமைத்து கொள்ளுங்கள் என்று சிபிஎஸ்இக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதற்கும் பதில் வரவில்லை.
5 ஆயிரம் மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கி தாருங்கள் என சிபிஎஸ்இ கேட்டிருந்தால் நாங்கள் உதவி செய்ய தயாராக இருந்தோம். ஆனால் கேட்கவில்லை. எனவே தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸுக்கு சிபிஎஸ்இ பதிலளிக்கட்டும். சிபிஎஸ்இ ஆணையத்துக்கு உதவி செய்ய அரசும், தம்பிதுரையும் முன்வந்த போதிலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தாங்களாகவே செய்ததுதான் இந்த குளறுபடிக்குக் காரணம். இனஇ வரும் காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் நடைபெறாது என்றார்.
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications