ஓ.பி.எஸ். மீண்டும் முதல்வராவதில் தவறில்லை.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தடாலடி
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற செம்மலையின் கருத்தில் தவறில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உகந்த சூழல் உருவாகியுள்ளதாக இரு அணியினரும் மாறி மாறி கூறிவந்தன. இதனால் பேச்சு வார்த்தை இன்று நடைபெறும் நாளை நடைபெறும் என ஒருவாரமாக எதிர்ப்பாக்கப்பட்டது.

இதற்காக ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் அமைக்கப்பட்ட பேச்சு வார்த்தை குழு எப்போது கூடி பேசும் என்று பரபரப்புகள் நீடித்து வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை. இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை, எடப்பாடி அணியுடன் சேர தொண்டர்கள் விரும்பவில்லை எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் அடுத்த மாதம் தொடங்கும், அதற்குள் இரு அணிகளும் இணையும். இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற செம்மலையின் கருத்தில் தவறில்லை. தினகரன் கைதுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இரு அணிகளும் ஒன்று சேர்வதே அனைவரின் விருப்பமாக உள்ளது. மேல் மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் செம்மலை தீர்மானம் பற்றி கவலை இல்லை. இரு அணிகள் இணைவது குறித்த முடிவை எடுக்க செம்மலைக்கு அதிகாரம் இல்லை என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications