வர்தா.. அவசர கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகளுடன் அமைச்சர் உதயகுமார் அவசர ஆலோசனை #Vardah
வர்தா புயல் முன்னெச்சரிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் உதயகுமார் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். நேற்றும் அவர் பல துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.
சென்னை: வர்தா புயல் முன்னெச்சரிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் உதயகுமார், சென்னையிலுள்ள மாநில எமர்ஜென்சி கட்டுப்பாட்டு அறையில் மாநில அதிகாரிகளுடன் அவர் அவசர ஆலோசனை நடத்தினார்.
சென்னை அருகே இன்று கரையை கடக்க இருக்கும் 'வர்தா' புயலை சமாளிப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசர ஆலோசனை கூட்டம் சென்னை எழிலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருவாய்துறை செயலாளர் சந்திரமோகன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், பேரிடர் மேலாண்மை இயக்குனர் லதா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
"'வர்தா' புயலால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள சென்னை, காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு தலா 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 160 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். காஞ்சீபுரத்தில் ஒரு பேரிடர் மீட்பு குழுவில் 40 வீரர்கள் உள்ளனர். அது மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களிலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்" என அமைச்சர் உதயகுமார் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னையிலுள்ள மாநில எமர்ஜென்சி கட்டுப்பாட்டு அறையில் மாநில அதிகாரிகளுடன் அவர் அவசர ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications