ரஜினி ஒரு வியாபாரி இன்றைக்கு ஒன்று பேசுவார் நாளைக்கு ஒன்று பேசுவார்.. போட்டுத்தாக்கும் அமைச்சர்!
ரஜினி ஒரு வியாபாரி அவர் இன்றைக்கு ஒன்று பேசுவார் நாளைக்கு ஒன்று பேசுவார் என அமைச்ச செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை: ரஜினி ஒரு வியாபாரி அவர் இன்றைக்கு ஒன்று பேசுவார் நாளைக்கு ஒன்று பேசுவார் என அமைச்ச செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் கெட்டுப் போகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் தனது ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். நிகழ்ச்சியின் இறுதி நாளில் பேசிய அவர், அரசியலில் எதிர்ப்பு தான் பலம் என்றும் தயாராக இருங்கள் போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
அவரது இந்த பேச்சு தனது அரசியல் பிரவேசத்தை உறுதிபடுத்துவதாக இருந்தது. இதைத்தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

எம்ஜிஆருக்குப் பிறகு என்னாச்சு?
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எம்ஜிஆருக்குப் பிறகு கட்சி தொடங்கியவர்கள் கதி என்னாச்சு என்பது மக்களுக்கு தெரியும் என்றார்.

கட்சி ஆரம்பிச்சவங்க..
சிவாஜிகணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த் என கட்சி தொடங்கியவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், அவர்களின் கதி என்னவாயிற்று என மக்கள் நன்கறிவார்கள் என்றார். மேலும் இதனை ரஜினியும் நன்கு அறிவார் என்றும் அவர் கூறினார்.

ரஜினி ஒரு வியாபாரி
எனவே ரஜினி கூறியதை பற்றியெல்லாம் கவலைக்கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். ரஜினி ஒரு வியாபாரி, அவர் இன்றைக்கு ஒன்று பேசுவார், நாளைக்கு ஒன்று பேசுவார் என்றும் அவர் சாடினார்.

சிஸ்டம் கெட்டுப்போகவில்லை
தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப்போயிருப்பதாக ரஜினி கூறியது குறித்தும் செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் கெட்டுப்போகவில்லை என்றார்.

மக்கள் தவிர்த்து விட்டனர்
மேலும் நடிகர்கள் பின்னால் போவதை மக்கள் தவிர்த்து விட்டனர் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எங்களை தொட்டிருக்க கூடாது சிங்காரம்.. தவெகவுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் மாஸ் முடிவு.. விஜய் ஷாக் -
சட்டசபைத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா? ஆதவுக்கான கண்டன ட்வீட்டை Decode செய்த அர்ஜுனமூர்த்தி -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications