அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுக்கும் துணை நிலை ஆளுநர் -கிரண்பேடி மீது குற்றம்சாட்டும் அமைச்சர்கள்
புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுக்கிறார் என சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, பாராளுமன்ற செயலர் லஷ்மி நாராயணன் குற்றம்சாட்டியுள்ளனர்.

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் மாநில அரசுக்கும் கடந்த சில நாட்களாக கடும் மோதல் நிலவி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, பாராளுமன்ற செயலர் லஷ்மி நாராயணன் ஆகியோர் துணைநிலை ஆளுநர் டுவிட்டரில் அரசு விஷயங்களை எழுதி ரகசியக்காப்புப் பிரமாணத்தை மீறுகிறார்.
மேலும், அரசு கோப்புகளில் கையெழுத்திடாமல் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களை துன்பத்துக்குள்ளாக்கி வருகிறார் என குற்றம்சாட்டியுள்ளனர். மத்திய அரசுக்கும் கிரண் பேடி குறித்து புகார் தெரிவித்ததால், அவரை மத்திய அரசு அழைத்துள்ளது. தற்போது டெல்லிக்கு அவர் விரைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications