குப்பைக்கு வரி விதிப்பதா.. நாமக்கல்லில், அமைச்சர் தங்கமணியை முற்றுகையிட்ட பெண்கள்
குப்பைக்கு வரி விதிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் தங்கமணியை பெண்கள் முற்றுகையிட்டனர்
நாமக்கல்: வீட்டிலிருந்து கொட்டப்படும் குப்பைக்கு வரி விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணியை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைக்கும் வரி விதிக்கும் நடைமுறை அமலாகியுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குப்பைகளை அள்ளும் பணியில் நிரந்தரப் பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என லட்சக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் தினமும் ஒவ்வொரு வார்டுகளிலும் சாலைகள், குடியிருப்பு பகுதிகள், குப்பைத் தொட்டிகளில் குவியும் குப்பைகள், வீடுகள் தோறும் தள்ளுவண்டியில் சென்று சேகரிக்கும் குப்பைகளை சேகரித்து லாரிகளில் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர்.
இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து குப்பைகளை அள்ளும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை தரம் பிரிப்பதற்கு அதிகமான பொருட்செலவும், மனித வேலைபாடுகளும் தேவைப்படுகிறது.
மேலும், குப்பைகளை தரம் பிரித்து பெறுவதால் குப்பையில் இருந்து உரம், இயற்கை எரிவாயு தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆகும் பொருட்செலவுகளை மக்களிடத்திலேயே வசூலிக்க முடிவெடுத்துள்ள அரசாங்கம், ஒவ்வொரு வீட்டிற்கும், வணிக கட்டிடத்திற்கும் குப்பை சேகரிக்க வரி விதித்துள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பல்வேறு மாவட்டங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திற்கு சென்ற அமைச்சர் தங்கமணியை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குப்பைக்கு கூட வரியை விதித்து தமிழக மக்களை அரசு வஞ்சிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.
மேலும் ஊதிய விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், பண விரயமாகும் திட்டங்களை மட்டும் செயல்படுத்தி அரசு தொடர்ந்து ஏழை மக்களை அவதிக்குள்ளாகி வருவதாகவும் பெண்கள் குற்றஞ்சாட்டினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications