அதிமுகவுக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆதரவு!
சென்னை: மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தமிமுன் அன்சாரி உருவாக்கியுள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சி தனது ஆதரவை அதிமுகவுக்கு அளித்துளளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படுகிறது.
நாளை சென்னை கொட்டிவாக்கத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு நடைபெறுகிறது. அதில் இந்த அறிவிப்பை பிரகடனம் செய்கிறார் கட்சித் தலைவர தமிமுன் அன்சாரி.

நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். வக்பு வாரிய தலைவர் தமிழ் மகன் உசேன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, பார்வர்டு பிளாக் கதிரவன், காயிதே மில்லத் பேரன் தாவூத் மியாகான், மனித நேய ஜனநாயக கட்சியின் பெங்களூர் தலைவர் முக்தார் அகமது உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.
இந்த மாநாட்டில் தனது கட்சியின் ஆதரவை தமிமுன் அசாரி அறிவிக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications