சொன்னா கேட்க மாட்டீங்களா.. ஒலிபெருக்கியில் கத்திய அழகிரி.. அமைதி பேரணியில் அமைதி போச்சு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தொண்டர்கள் தொடர் கோஷம்...ஒலிபெருக்கியில் கத்திய அழகிரி- வீடியோ
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி நின்று அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே இருந்து மெரினா பகுதியில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் வரை இந்த பேரணி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பலரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். அமைதி பேரணி என்ற வாசகத்துடன் கூடிய, பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

ஆனால் அண்ணன் அஞ்சா நெஞ்சன் வாழ்க என்று கோஷமிட்டனர். அமைதி பேரணி என்று கூறிவிட்டு கோஷம் போடுவது சரியில்லை என்பது உணர்ந்து கொண்ட அழகிரி, சத்தம் போடாதீர்கள், சொன்னா கேட்க மாட்டீர்களா, சத்தம் போடாமல் வாங்க என்று வாகனத்தில் இருந்தபடி ஒலிபெருக்கியில் கூறியபடி இருந்தார்.












Click it and Unblock the Notifications