பெரும்பான்மையிருந்தா எதை வேணாலும் செய்வீங்களா?.. பாஜகவை விளாசிய ஸ்டாலின்
சென்னை: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையிருந்தால் எதை வேண்டுமானாலும் செய்வீர்களா என்று மத்திய அரசை மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசினார்.
கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவானதை தொடர்ந்து வைரவிழாவும் இன்று மாலை தொடங்கியது. இதில் முதன்மை பொதுச் செயலாளர் துரைமுருகன் வரவேற்புரை அளித்து பேசினார்.

இதில் இறுதியாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில் இந்திராகாந்தி, வி.பி.சிங், தேவகவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் பிரதமராக முக்கிய காரணமாக இருந்தவர் கருணாநிதி.
அதுமட்டுமல்ல தேசிய அரசியலை தீர்மானிக்கும் கலங்கரை விளக்கமாகவும் இருந்தார். மத்தியிலுள்ள அரசு 3 ஆண்டு ஆட்சியில் என்ன செய்துள்ளார்கள்? மக்களை பற்றி கவலைப்பட்டுள்ளார்களா?
பெரும்பான்மை உள்ள காரணத்தால் எதை வேண்டுமானாலும் செய்துவிடமுடியுமா? லோக்சபா தேர்தலின்போது மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றார்கள். கருப்பு பணத்தை மீட்போம் என்றார்கள்.
கருப்பு பணத்தை மீட்டு மக்களின் வங்கிக் கணக்கில் தலைக்கு ரூ.15 லட்சம் போடுவோம் என்றார்கள். இன்று ரூ.15-ஆவது வங்கிக் கணக்கில் மத்திய அரசால் போடப்பட்டதா?
ஊழலை ஒழிக்கும் வல்லமை படைத்த லோக்பால் உருவாக்கப்பட்டதா? மத்திய பாஜக அரசு, இந்தியாவை மதவாத நாடாக மாற்ற பாடுபடுகிறது. மதத் தலைவர்கள் தலைமையில் ஒவ்வொரு மாநிலத்தையும் சிக்க வைத்துள்ளனர்.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மதசார்பின்மை என வரும்போது அனைவரும் ஒன்றுபட வேண்டும். நமக்குள் எந்த கருத்து வேறுபாடு இருந்தாலும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்பதை விழா மேடை எடுத்து காட்டுகிறது. இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க வேண்டியது நமக்கு முன்பு உள்ள பெரும் சவால் என்றார் ஸ்டாலின்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications