அன்பு வாக்காளர்களே... வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் வாக்கு கேட்கும் மு.க.ஸ்டாலின்
ஆர்கே நகரில் இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் வாக்கு சேகரித்து வருகிறார்.
சென்னை: ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடம் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாட்ஸ் ஆப் மூலம் வாக்கு சேகரித்து வருகிறார்.
ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர், துணை முதல்வர் , அமைச்சர்கள் என பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதுபோல் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து திமுக நிர்வாகிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். இன்று முதல் 3 நாட்களுக்கு செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதனிடையே திமுக ஸ்டாலின் வாட்ஸ் ஆப் மூலம் வாக்கு சேகரிக்கும் ஆடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசுகையில் அன்பார்ந்த ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்களே, உங்களில் ஒருவரான முக ஸ்டாலின் விடுக்கும் அன்பு வேண்டுகோள், அனைத்து நிலைகளிலும் தமிழகத்தை கடைசி இடத்துக்கு தள்ளி, லஞ்ச, ஊழலை மட்டும் முதலிடத்துக்கு கொண்டு வந்திருக்கும் குதிரை பேர அதிமுக அரசை விரைந்து மாற்றுவதற்காக ஒரு தொடக்கப்புள்ளியாக இந்த இடைத்தேர்தல் களம் இருக்கட்டும். எப்போதும் உங்களுடன் இருக்கும் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். நன்றி... வணக்கம்.. என்று அந்த ஆடியோவில் உள்ளது.
-
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications