அன்பு வாக்காளர்களே... வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் வாக்கு கேட்கும் மு.க.ஸ்டாலின்
ஆர்கே நகரில் இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் வாக்கு சேகரித்து வருகிறார்.
சென்னை: ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடம் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாட்ஸ் ஆப் மூலம் வாக்கு சேகரித்து வருகிறார்.
ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர், துணை முதல்வர் , அமைச்சர்கள் என பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதுபோல் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து திமுக நிர்வாகிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். இன்று முதல் 3 நாட்களுக்கு செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதனிடையே திமுக ஸ்டாலின் வாட்ஸ் ஆப் மூலம் வாக்கு சேகரிக்கும் ஆடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசுகையில் அன்பார்ந்த ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்களே, உங்களில் ஒருவரான முக ஸ்டாலின் விடுக்கும் அன்பு வேண்டுகோள், அனைத்து நிலைகளிலும் தமிழகத்தை கடைசி இடத்துக்கு தள்ளி, லஞ்ச, ஊழலை மட்டும் முதலிடத்துக்கு கொண்டு வந்திருக்கும் குதிரை பேர அதிமுக அரசை விரைந்து மாற்றுவதற்காக ஒரு தொடக்கப்புள்ளியாக இந்த இடைத்தேர்தல் களம் இருக்கட்டும். எப்போதும் உங்களுடன் இருக்கும் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். நன்றி... வணக்கம்.. என்று அந்த ஆடியோவில் உள்ளது.