ஜெ. மரணம் குறித்து நீதி விசாரணை: ஓபிஎஸ் அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணையை வரவேற்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்புக்கு திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியால் உள்ளிட்டோர் சென்னையில் திடீரென செய்தியாளர்களை சந்தித்து ஜெயலலிதாவுக்கான சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தனர்.

ஆனாலும் ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்கள் விலகவில்லை. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இது தொடர்பாக சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. காலம் தாழ்ந்த அறிவிப்பாக இது இருந்தாலும் முறைப்படி செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications