மாட்டு வண்டி கட்டிக்கிட்டு.. அப்பாவுக்காக வித்தியாசமாக பிரச்சாரம் செய்யும் மு.க.தமிழரசு
திருவாரூர்: திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதிக்கு வாக்களிக்கக் கோரி வித்தியாசமான முறையில் அவரது இளைய மகன் மு.க.தமிழரசு வாக்கு சேகரித்து வருகிறார்.
கருணாநிதியின் பெயர் அறிவிக்கப்பட்டது முதலே திருவாரூரில் பிரச்சாரத்தி்ல் ஈடுபட்டு வருகிறார் தமிழரசு. வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தற்போது வித்தியாசமான முறையிலும் அவர் வாக்கு சேகரிதது வருகிறார். ஒரு மாட்டு வண்டியில் ஏறி அதை ஓட்டிச் சென்று கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார் தமிழரசு.
தமிழரசு மாட்டு வண்டியை ஓட்டி வந்ததைப் பார்த்து கிராம மக்கள் அடடா என்று ஆச்சரியப்பட்டனர். திருவாரூர் தொகுதியில் விவசாயிகள் அதிகம் என்பதால் அவர்களைக் கவரும் வகையி்ல இப்படி தமிழரசு பிரச்சாரம் செய்ததாக தொகுதி மக்கள் கூறுகின்றனர்.
அதேசமயம், எதிர்த் தரப்பினர் இதெல்லாம் டிராமா என்று வர்ணிக்கின்றனர். இப்போது இப்படித்தான் டிராமா போடுவார்கள். பிறகு யாரையுமே பார்க்க முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த தேர்தலில் திருவாரூரில் 50,000க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications