எம்எல்ஏவுக்கு அப்பா வயசு.. எப்படி மணப்பேன்.. மீட்கப்பட்ட மணப்பெண் கண்ணீர்
மாயமான மணப்பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர்.
Recommended Video

கோபி: பவானிசாகர் அதிமுக எம்எல்ஏ மணக்கவிருந்து, பின்பு திடீரென மாயமான இளம்பெண் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.
பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரன். இவருக்கு வயது 43. இவருக்கும் சத்தியமங்கலத்தை சேர்ந்த சந்தியா என்ற 23 வயது பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

முதலமைச்சர் பழனிசாமி
வரும் 12ம் தேதி பண்ணாரி அம்மன் கோயிலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திருமணத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. இதற்கான பத்திரிகையும் ஊர் முழுக்க கொடுக்கப்பட்டு வந்தது.

வேறு பெண் முடிவு
ஆனால் கடந்த 1ம் தேதி சந்தியா வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாயார் கொடுத்த போலீஸ் புகாரின் அடிப்படையில் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். எம்எல்ஏ மணக்கவிருந்த பெண் மாயமானது பவானிசாகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு அவரது சமூகத்திலேயே வேறு ஒரு பெண்ணை பார்த்து நிச்சயித்துவிட்டதாகவும், குறித்த முகூர்த்தத்திலேயே திருமணம் என்றும் நேற்று உறுதி கூறப்பட்டது.
[Read This: நிச்சயித்த பெண் மாயம்...அதிமுக எம்எல்ஏக்கு இன்னொரு பெண் கிடைத்து விட்டார்-வீடியோ]

அப்பா வயது உள்ளவர்
இந்நிலையில், திருச்சியில் சத்யா என்பவரின் வீட்டில் மாயமான சந்தியாவை போலீசார் மீட்டனர், பின்னர் அவரை கோபி ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது வீட்டை விட்டு போக வேண்டிய காரணம் என்ன என்று நீதிபதி விசாரித்தார். அதற்கு சந்தியா, "இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கவில்லை. மாப்பிள்ளைக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் அதிகமாக இருக்கு. எனக்கும் எம்.எல்.ஏ., ஈஸ்வரனுக்கும் 20 வயது வித்தியாசம் உள்ளது. என் தந்தை வயது உள்ளவரை நான் எப்படி திருமணம் செய்வேன்? அதனால் வேறு வழியில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினேன். இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம் என்று வீட்டில் சொன்னேன். ஆனாலும் கட்டாயப்படுத்திதான் ஏற்பாடுகள் செய்தார்கள்" என்றார்.
[Read This: மணப்பெண்ணால் கைவிடப்பட்ட ஈரோடு அதிமுக எம்எல்ஏ ஹேப்பி அண்ணாச்சி.. அடுத்த பெண் கிடைத்தார்!]

துன்புறுத்தக்கூடாது
இதன்பின்னர் சந்தியாவின் பெற்றோரை அழைத்து, அவர்களிடம் சந்தியா கூறிய விபரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டது. அப்போது பெற்றோர் மகளை தங்களுடனே கூட்டி செல்கிறோம் என்றனர். அதற்கு நீதிபதி, "அப்படியானால், சந்தியாவை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தக்கூடாது, அவரை அடித்து துன்புறுத்துவதோ கூடாது. அதேபோல உறவினர்கள் அவரை விசாரணை செய்வதோ கூடாது" என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்மதம் தெரிவித்தபிறகுதான் சந்தியா பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications