குளுகோஸ் ஏற்றியபடியே வந்து வாக்களித்த மதுரை அதிமுக எம்.எல்.ஏ!
Subscribe to Oneindia Tamil

கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார் மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே.போஸ். இதனால் வீட்டில் இருந்தபடியே இவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
தொடர்ந்து அவருக்கு குளுகோஸ் ஏற்றப் பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. எனவே, தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற நினைத்த போஸ், குளுக்கோஸ் பாட்டில்களுடனே வாக்குச் சாவடிக்கு அழைத்து செல்லப் பட்டார்.
முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு என இத்தேர்தலில் சில சிறப்பு வசதிகள் செய்யப் பட்டுள்ளதால், உடல்நலன் பாதிக்கப் பட்ட போஸ் உடனடியாக வாக்களிக்க அனுமதிக்கப் பட்டார்.
ஒரு கையில் பாட்டிலைப் பிடித்த படி வந்து தனது வாக்கை போஸ் அளித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications