Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம் அருகே.. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபரிடம் செல்போன் பறிப்பு..செத்துப்போன மனிதநேயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தாம்பரம் அருகே விபத்தில் சிக்கிய இளைஞர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு உதவி செய்யாமல் அவரிடம் இருந்து செல்போனை திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மனிதநேயமற்ற செயலால் விபத்தில் சிக்கிய இளைஞர் மூளைச்சாவு அடைந்துள்ளார்.

சென்னை தாம்பரம் அருகே உள்ள சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது இளைய மகன் கார்த்திகேயன் (வயது 25) பிசிஏ முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 23 ஆம் தேதி தனது பெரியம்மா வீட்டிற்கு பைக்கில் சென்ற கார்த்திகேயன் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

Mobile phone confiscated from person who fought for life in an accident near Tambaram

அப்போது மகாலட்சுமி நகர் அருகே சாலையில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் கார்த்திகேயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கி ரத்த காயங்களுடன் கிடந்த கார்த்திகேயேன், விபத்தில் சிக்கி விட்ட தகவலை தனது மாமாவை தொடர்பு கொண்டு தெரிவித்து இருக்கிறார்.

கார்த்திகேயன் விபத்தில் சிக்கிய தகவலை அறிந்து பதறிய அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு இருக்கின்றனர். ஆனால், செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் கார்த்திகேயேன் எந்த இடத்தில் விபத்தில் சிக்கியிருக்கிறார் என்ற தகவல் தெரியாமல் இரவு முழுவதும் பரிதவிப்புடன் தேடி அலைந்துள்ளனர்.

விபத்தில் சிக்கி மயக்கம் அடைந்து கிடந்த கார்த்திகேயனுக்கு உதவாமல் அவரது செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்று சுவிட்ச் ஆப் செய்து இருக்கிறார். ஆபத்து காலத்திலும் உதவமால் கொடூர மனத்துடன் செல்போனை திருடிச்சென்ற நபரால் கார்த்திகேயனை உரிய நேரத்தில் அவரது பெற்றோர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதிகாலையில், அந்த வழியாக ஒரு கடைக்காரர், இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி மயக்க நிலையில் கிடப்பதாக சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து ஆம்புலன்ஸ் மூலம் கார்த்திகேயனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றினர்.

Mobile phone confiscated from person who fought for life in an accident near Tambaram

தொடர்ந்து சிகிச்சை அளித்த நிலையிலும் பலனளிக்காமல் கார்த்திகேயகன் மூளைச்சாவு அடைந்தார். இந்த தகவலை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து கண்ணீர் விட்டு கதறினர். கார்த்திகேயனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து கார்த்திகேயன் உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

உறவினர்களும் நண்பர்களும் கண்ணீர் மல்க கார்த்திகேயன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபருக்கு உரிய நேரத்தில் உதவியிருந்தால் கார்த்திகேயனை காப்பாற்றியிருக்கலாம். இரக்க குணம் இல்லாமல் கல் நெஞ்சம் படைத்த கொடூரன் செல்போனை மனித நேயம் இன்றி திருடிவிட்டானே என்று அங்கிருந்தவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+