சென்னையில் நரேந்திர மோடி... 2 முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
சென்னை: சென்னைக்கு இன்று ஒரு நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று நெசவாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் முக்கியமாக பங்கேற்றுள்ளார்.
தேசிய கைத்தறி தினத்தையொட்டி, கைத்தறி நெசவாளர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் இந்த விழா நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், ஆளுநர் ரோசய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மோடியின் சென்னை நிகழ்ச்சி நிரல்...
- இருந்து சென்னை பல்கலைக்கழக மண்டபத்திற்கு 11 மணிக்கு வருகிறார் மோடி.
- 12.30 மணிக்கு சென்னை பல்கலைக்கழக மண்டபத்திலிருந்து புறப்பட்டு 12.50 மணிக்கு போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று ஜெயலலிதாவை சந்திக்கிறார்
- முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து மதிய உணவு சாப்பிடுகிறார் மோடி.
- 1.35 மணிக்கு போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டு விமான நிலையம் சென்று, 2.05 மணிக்கு டெல்லிக்கு திரும்பிச் செல்கிறார்
மிக பலத்த பாதுகாப்பு
பிரதமான பிறகு மோடி முதல் முறையாக சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் இப்போதுதான் கலந்து கொள்கிறார். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சேப்பாக்கம் பகுதி நேற்றிலிருந்தே பாதுகாப்புப் படையினரின் வசம் வந்து விட்டது மேலும் நேற்று விடிய விடிய இரவு முழுவதும் வாகனச் சோதனைகளும் முடுக்கி விடப்பட்டிருந்தன.