ஜெயலலிதாவுக்கு போன் மூலம் மோடி வாழ்த்து: முழு ஒத்துழைப்புக்கு உத்தரவாதம்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் மோடி.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி வெற்றி பெற்றதற்கு அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதையடுத்து பிரதமராக பதவி ஏற்கவிருக்கும் மோடி இன்று மதியம் ஜெயலலிதாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளை கைப்பற்றியதற்காக அவர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மோடி பிரதமராக வெற்றிகரமாக செயல்பட ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே முழு ஒத்துழைப்பு இருக்கும் என்று மோடி ஜெயலலிதாவுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
முன்னதாக ஜெயலலிதா மோடிக்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே அர்த்தமுள்ள ஒத்துழைப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications