4 மாவட்டங்களுக்கு பயன் தரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை.. திறந்து வைத்தார் மோடி
கோவை: கோவை சி்ங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் கட்டடங்களை, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், பண்டாரு தத்தாத்ரேயா, கவர்னர் ரோசைய்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2009ம் ஆண்டு சென்னை மற்றும் கோவையில் புதிதாக மருத்துவ கல்லுாரி கட்டப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, கோவை வரதராஜபுரத்தில், 520 கோடி ரூபாய் மதிப்பில், கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. அனைத்து பணிகளும் நிறைவடைந்து, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை திறந்து வைக்க இன்று கோவை வந்தார் பிரதமர் மோடி. மாலை 4 மணியளவில் இ.எஸ்.ஐ மருத்துவமனையை திறந்து வைத்தார்.

மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை
புதிய இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவ மனையில், புறநோயாளிகள், உள்நோயாளிகள், 24 மணி நேரமும் செயல்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, மருத்துவக் கல்லுாரி ஆகியவற்றுக்கு, தனித்தனி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் அனைத்து வசதிகளும், சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏழு லட்சம் சதுர அடி பரப்பில், நான்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மருத்துவ கல்லுாரியுடன் இணைந்த இம்மருத்துவமனையில், 31 துறைகள் உள்ளன. இதில், 17 துறைகள் பொதுவானவை; 14 சிறப்பு மருத்துவ துறைகள். புறநோயாளிகள் பிரிவுடன், அவசர மருத்துவ சேவைப்பிரிவும் செயல்படும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.
24 மணிநேர சிகிச்சை
இப்பிரிவில், சிகிச்சை பெற்றவர்களை கண்காணிக்க, சிறப்பு வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புறநோயாளிகள் பிரிவில், நான்கு தளங்களில் அனைத்து மருத்துவ பிரிவுகளும் செயல்படும் வகையில், வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய, சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவும் உள்ளது.

4 மாவட்ட தொழிலாளர்கள்
மருத்துவமனையில் உள்ள அனைத்து, அறுவை சிகிச்சை அரங்குகளும் நோய் தொற்றை தவிர்க்கும் வகையில், சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட தொழிலாளர்களுக்கு, சிகிச்சை அளிக்கும் இடமாக, இம்மருத்துவமனை அமைந்துள்ளது.

பொன். ராதாகிருஷ்ணன்
மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஒரு லட்சத்து 33 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட தொழிலாளர்களுக்கு பயன்தரும் என்றார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications