For Quick Alerts
For Daily Alerts
Just In
பைக் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்து: கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பலி!
கரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி தடுப்புச் சுவரில் மோதி தடுமாறி விழுந்தனர். இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
கரூர்: கரூரைச் சேர்ந்த பிச்சைமுத்து, பாப்பாத்தி தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் வேலாயுதம்பாளையத்துக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பபாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கணவன் மனைவி இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். தலையில் பலத்த காயமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்தில் உயரிழந்தவர்கள் யார் என்பது குறித்த முழு விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
Comments
English summary
A couple were traveling in a motor cycle near Karur. Suddenly the bike lost control and hit on the center Median. In this accident a husband and wife died on the spot.
Story first published: Monday, December 26, 2016, 13:14 [IST]