For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரியில் வெள்ளப்பெருக்கால் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம் மூடல்

காவிரியில் வெள்ளப்பெருக்கால் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம் மூடப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருச்சி: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திருச்சியில் உள்ள முக்கொம்பு சுற்றுலா மையம் மூடப்பட்டது.

கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அங்குள்ள நீர் நிலைகள், அணைகள் நிரம்பின. இதையடுத்து கேஆர்எஸ் அணையிலிருந்து கபினி அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

Mukkombu tourist spot closed

பின்னர் கபினியிலிருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூரில் 120 அடியை எட்டியதால் அங்கிருந்தும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் திருச்சியில் முக்கொம்புவுக்கு நீர் வரத்து அதிகமாக இருந்தது.

தொடர்ந்து மேட்டூரிலிருந்து நீர் வந்து கொண்டேயிருந்ததால் முக்கொம்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக்கொம்பு சுற்றுலா மையம் மூடப்பட்டுள்ளது.

இதை திருச்சி மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மறுஅறிவிப்பு வரும் வரை முக்கொம்பு சுற்றுலா மையம் மூடியே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Mukkombu tourist spot closes from today indefinitely because of water flow in Cauvery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X