நெல்லை: கோஷ்டி மோதலில் 3 பேர் வெட்டிக் கொலை போலீஸ் குவிப்பு
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் வெட்டிக்கொள்ளப்பட்டுள்ளனர். இதனால் பதற்றம் உருவாகியுள்ளது. கிராமப் பகுதிகளில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூர் பகுதியை சார்ந்தவர்களுக்கும்,சிவலார் குளத்தை சார்ந்தவர்களுக்கும் நேற்று இரவு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் வீடுகளை அடித்து நொறுக்கியும், பொருட்களை சேதப்படுத்தியும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு நடந்த சம்பவத்திருக்கு பழிவாங்கும் நோக்குடன் ஒருபிரிவை சார்ந்தவர்கள் இன்று 4 பைக்கில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவ்வழியாக சென்ற மற்றொரு பிரிவை சார்ந்தவர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் நல்லுரை சார்ந்த வைத்தியலிங்கம் ராஜா, பாப்பாகுடி அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ்,ஆகிய 3 பேரை அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியது.
ஒரே பகுதியில் இரு பிரிவை சார்ந்தவர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதல் நெல்லைமாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் முடுக்கி விடப் பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆலங்குளம்- வழியாக செல்லும் சில கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications