சுபாஷ் பண்ணையார் உயிருக்கு ஆபத்து.. நீதிமன்றம் வரும்போது கொல்ல சதி.. உளவுத்துறை உஷார்
நெல்லை: சிங்காரம் கொலை வழக்கில் தொடர்புடைய சுபாஷ் பண்ணையாரை சிறையில் கொல்ல சதி திட்டம் திட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதால் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலை சேர்ந்தவர் சுபாஷ் பண்ணையார். இவர் மீது அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன், அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியன் உள்ளிட்ட பல கொலை வழக்குகள் உள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி அருகே புல்லாவெளியை சேர்ந்த பசுபதி பாண்டியன் ஆதரவாளர் சிங்கராம் என்பவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வரும் போது போலீசாரை தாக்கி நான்கு வழி சாலையில் வைத்து வெட்டி கொன்றனர். இதில் சுபாஷ் பண்ணையாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
பல நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசில் சரண் அடைந்தார். இதில் அவருக்கு தற்காலிக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி அவர் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே சுபாஷ் பண்ணையாரை தீர்த்து கட்ட பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் திட்டம் திட்டியுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. வரும் 26ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வரும் போது இந்த திட்டத்தை முடிக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்திருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன. பாளை மத்திய சிறையில் இருக்கும் பசுபதி பாண்டியன் கூட்டாளிகள் இந்த திட்டத்தை தீட்டியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. சிங்காரம் கொலை பாணியில் இதை செய்ய திட்டமிட்டுருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளதால் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications