இளையராஜா பாடல்கள்: தனியார் நிறுவனங்கள் மீதான தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
சென்னை: தமிழ் சினிமாவின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரும், இசைஞானி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான இளையராஜா சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
தனது பாடல்களை எந்தவித உரிமையும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன, இதனைத் தடை செய்ய வேண்டும் என்ற ரீதியில் ஒரு மனுவை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
சில தனியார் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார், இதில் இசைஞானிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.

45 வருடங்களுக்கும் மேலாக இசையமைத்து வருகிறேன்
தென்னிந்திய திரைப்படங்களில் கடந்த 1970-ம் ஆண்டு முதல் இசையமைத்து வருகின்றேன். இந்தியாவில் உள்ள தலைசிறந்த இசையமைப்பாளர்களில் நானும் ஒருவனாக திகழ்ந்து வருகின்றேன்.

1௦௦௦ திரைப்படங்கள் 4 தேசிய விருதுகள்
இதுவரை ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளேன், இசைக்காக 4 தேசிய விருதுகள் பெற்றுள்ளேன்.

அனுமதி பெறாத தனியார் நிறுவனங்கள்
நான் இசையமைத்த திரைப்படம் மற்றும் பக்தி பாடல்களை ஒலிப்பரப்ப யாருக்கும் நான் அனுமதி வழங்கவில்லை. ஆனால், அகி மியூசிக் நிறுவனம், எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி, யுனிசிஸ் இன்போ சொல்யூசன் நிறுவனம், மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனம், மும்பையை சேர்ந்த கிரி டிரேடிங் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் எந்த ஒரு அனுமதியையும் பெறாமல் என்னுடைய பாடல்களை விற்பனை செய்து வருகின்றன.

காப்புரிமையையும் விட்டு வைக்கவில்லை
இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சிலர், 3-வது நபருக்கு என்னுடைய பாடல்கள் மீதான காப்புரிமையை சட்ட விரோதமாக வழங்கியுள்ளனர். எனவே, எந்த ஒரு அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக இந்த நிறுவனங்கள் என் பாடல்களை கேசட்டில் விற்பனை செய்து, ஒலிப்பரப்புகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும், என்று அந்த மனுவில் இளையராஜா கூறியிருந்தார்.

நிறுவனங்களுக்கு தடை விதித்த நீதிமன்றம்
இளையராஜாவின் மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்ப, கேசட்டில் விற்பனை செய்ய அகி உட்பட மேலே சொன்ன 5 நிறுவனங்களுக்கும் நிரந்த தடை விதித்து உத்தரவிட்டார்.

தடையை எதிர்த்து வழக்கு
இந்த தடையை எதிர்த்து அகி மியூசிக் நிறுவனம், எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி, யுனிசிஸ் இன்போ சொல்யூசன் நிறுவனம், மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனம், மும்பையை சேர்ந்த கிரி டிரேடிங் கம்பெனி போன்ற நிறுவனங்கள் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

தவிடுபொடியான தனியார் நிறுவனங்கள்
தனியார் நிறுவனங்கள் மேல்முறையீடு செய்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தடையை நீக்க கோரிய தனியார் நிறுவனங்களின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications