இளையராஜா பாடல்கள்: தனியார் நிறுவனங்கள் மீதான தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
சென்னை: தமிழ் சினிமாவின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரும், இசைஞானி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான இளையராஜா சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
தனது பாடல்களை எந்தவித உரிமையும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன, இதனைத் தடை செய்ய வேண்டும் என்ற ரீதியில் ஒரு மனுவை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
சில தனியார் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார், இதில் இசைஞானிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.

45 வருடங்களுக்கும் மேலாக இசையமைத்து வருகிறேன்
தென்னிந்திய திரைப்படங்களில் கடந்த 1970-ம் ஆண்டு முதல் இசையமைத்து வருகின்றேன். இந்தியாவில் உள்ள தலைசிறந்த இசையமைப்பாளர்களில் நானும் ஒருவனாக திகழ்ந்து வருகின்றேன்.

1௦௦௦ திரைப்படங்கள் 4 தேசிய விருதுகள்
இதுவரை ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளேன், இசைக்காக 4 தேசிய விருதுகள் பெற்றுள்ளேன்.

அனுமதி பெறாத தனியார் நிறுவனங்கள்
நான் இசையமைத்த திரைப்படம் மற்றும் பக்தி பாடல்களை ஒலிப்பரப்ப யாருக்கும் நான் அனுமதி வழங்கவில்லை. ஆனால், அகி மியூசிக் நிறுவனம், எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி, யுனிசிஸ் இன்போ சொல்யூசன் நிறுவனம், மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனம், மும்பையை சேர்ந்த கிரி டிரேடிங் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் எந்த ஒரு அனுமதியையும் பெறாமல் என்னுடைய பாடல்களை விற்பனை செய்து வருகின்றன.

காப்புரிமையையும் விட்டு வைக்கவில்லை
இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சிலர், 3-வது நபருக்கு என்னுடைய பாடல்கள் மீதான காப்புரிமையை சட்ட விரோதமாக வழங்கியுள்ளனர். எனவே, எந்த ஒரு அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக இந்த நிறுவனங்கள் என் பாடல்களை கேசட்டில் விற்பனை செய்து, ஒலிப்பரப்புகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும், என்று அந்த மனுவில் இளையராஜா கூறியிருந்தார்.

நிறுவனங்களுக்கு தடை விதித்த நீதிமன்றம்
இளையராஜாவின் மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்ப, கேசட்டில் விற்பனை செய்ய அகி உட்பட மேலே சொன்ன 5 நிறுவனங்களுக்கும் நிரந்த தடை விதித்து உத்தரவிட்டார்.

தடையை எதிர்த்து வழக்கு
இந்த தடையை எதிர்த்து அகி மியூசிக் நிறுவனம், எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி, யுனிசிஸ் இன்போ சொல்யூசன் நிறுவனம், மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனம், மும்பையை சேர்ந்த கிரி டிரேடிங் கம்பெனி போன்ற நிறுவனங்கள் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

தவிடுபொடியான தனியார் நிறுவனங்கள்
தனியார் நிறுவனங்கள் மேல்முறையீடு செய்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தடையை நீக்க கோரிய தனியார் நிறுவனங்களின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications