மதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை: வைகோ திட்டவட்டம்
சென்னை: மதிமுகவில் ஒருபோதும் வாரிசு அரசியலுக்கு இடமில்லை. தனது குடும்பத்திலிருந்து யாரும் கட்சிப் பதவிக்கு வர மாட்டார்கள் என்று மதிமுக உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவரது மகன் துரை வையாபுரி, விருதுநகர் தொகுதி முழுவதும் கிராம மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்தார். அவரது பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்க மதிமுகவில் சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து, மதிமுக உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டது.
வியாழக்கிழமை நடந்த உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், துரை வையாபுரிக்கு கட்சிப் பதவி வழங்குவது குறித்து, ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வைகோ மறுப்பு
அப்போது துரைக்கு எந்தப் பதவியும் வழங்கத் தேவையில்லை என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

மகன் என்ற முறையில் பிரசாரம்
துரை வையாபுரி தனது வணிகத்தில் முழுக்கவனம் செலுத்தி வரும் நிலையில், அவர் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இல்லை. தந்தை (வைகோ) தேர்தலில் போட்டியிட்டதற்காக மகன் என்ற முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

தாயகத்திற்கு வருவதில்லை
அவர் மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்துக்கு இதுவரை 2 முறை மட்டுமே அங்கு வந்துள்ளார். செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் எல்.கணேசன் ஆகியோர் மதிமுகவிலிருந்து வெளியேறியபோது, மதிமுக அலுவலகம் மீது தாக்குதல் நடந்தது. அப்போது கட்சி அலுவலகத்தில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க மதிமுக நிர்வாகிகள், தாயகத்துக்கு வந்து நின்றனர். அப்போது, துரை வையாபுரியும் வந்து நின்றார்.

தம்பியும் வருவதில்லை
இதேபோல், வைகோவின் தம்பி ரவி அண்ணாச்சி என்ற ரவிச்சந்திரனும் மதிமுக கட்சி அலுவலகத்துக்கு வருவதில்லை. எனவே, தனது குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும், எந்தக் காலத்திலும் பதவி அளிக்கப் போவதில்லை என்று மதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உறுதியாக கூறியுள்ளார் வைகோ.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications