போரூர் கட்டிட விபத்து மீட்புப் பணியில் மத்திய அரசும் ஈடுபட வேண்டும்... சந்திரபாபு நாயுடு கோரிக்கை
சென்னை: போரூர் கட்டிட விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை விரைந்து மீட்கும் நடவடிக்கையாக மத்திய அரசும் மீட்புப் பணியில் இணைய வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் சென்னையில் இடியுடன் பெய்த கனமழையில் போரூர் மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. முழுவதும் கட்டுமானப் பணிகள் நடந்து முடியாத அந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணியாளர்கள் தங்கியிருந்தனர்.
கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் இடிபாடுகளுக்கிடையே ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து மூன்றாவது நாளாக நடந்து வருகிறது. மீட்பு பணி முழுவதுமாக முடிவடைய இன்னும் சில நாட்கள் ஆகலாம் என தேசிய பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

இடைபாடுகளில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 18 தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பலியான தொழிலாளர்களில் பெரும்பாலனவர்கள் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் நெல்லூர் மாவட்ட இணை ஆட்சியர் ரேகா பிரியதர்ஷனி தலைமையிலான குழு ஒன்று சென்னையில் முகாமிட்டு மீட்பு பணிகளை பார்வையிட்டு வருவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆந்திர மந்திரி சீதாராகவராவும் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டார்.
இந்நிலையில், விபத்தில் பலியான ஆந்திர மாநில தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்க நேற்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக இன்று விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார் சந்திரபாபுநாயுடு. அதனைத் தொடர்ந்து கட்டிட விபத்தில் காயமடைந்து போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சந்திரபாபு நாயுடு, ‘மவுலிவாக்கம் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனவும், மத்திய அரசும் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications