Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலஸ்தீனர்களை இஸ்ரேல் அடித்துவிரட்டுவதைப் போல ஒருநாள் தமிழரை வட இந்தியர்கள்... எச்சரிக்கும் சீமான்

Subscribe to Oneindia Tamil

பசும்பொன்: தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் வன்முறை அதிகரிப்பதால் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல இன்னர் லைன் பெர்மிட் முறையை அமல்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: வடமாநிலத்தவர் சென்னையில் போலீசாரை தாக்கியது ஒரு தொடக்கம்தான். இதேபோல நிறைய நடைபெறப் போகிறது. நிறைய நடக்கும்.

Naam Tamilar Seeman warns on North Indian Migrant Workers

அண்ணன் இதை பலநாளாக பேசிகிட்டே இருக்கேன்.. ஆனால் பலரும் இதேவேலைதான் இவருக்கு என நினைக்கிறார்கள். அவர்களுக்குள் (வட இந்தியர்கள்) அடித்து கொள்கிறவர்கள் நாளை நம்மை திருப்பி அடிக்க எவ்வளவு நேரமாகும்? பாலஸ்தீனம், இஸ்ரேல் பிரச்சனை என்னவாம்? இருக்க இடம் கொடுத்த பாலஸ்தீனர்களை அடித்து விரட்டுகிறது இஸ்ரேல். இதே நிலைமைதான்.. 40 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். 40 லட்சம் பேருக்கு வாக்குரிமையும் கொடுத்துவிட்டால் என் வாழ்வுரிமை என்னவாகும்? கர்நாடகாவில் தமிழர்களை அடித்து விரட்டி அடித்த போது இந்திய ராணுவம் எங்களை பாதுகாத்ததா? அதேபோல வட இந்தியர்கள் ஒருநாள் எங்களை அடித்து விரட்டுவார்கள். அப்போது எல்லோரும் வேடிக்கைதான் பார்ப்பார்கள். அதனால்தான் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல உள்நுழைவு அனுமதி தர வேண்டும்- இன்னர் லைன் பெர்மிட் தர வேண்டும் என்கிறோம்.

Naam Tamilar Seeman warns on North Indian Migrant Workers

காவிரி பிரச்சனையில் ஒரு அரசியல் இருக்கிறது. தமிழரின் சொத்துகள் இந்தியர்கள் அனைவருக்கும் என பொதுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. நரிமணம் பெட்ரோல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி மூலமான மின்சாரம் உள்ளிட்டவை அனைத்துமே இந்தியர்களுக்கு என பொதுமைப்படுத்திவிட்டனர். ஆனால் அவரவர் நிலவளம், நீர்வளம் தங்களுக்குதான் என கேரளா, கர்நாடகா அரசுகள் செயல்படுகின்றன. அதனால்தான் நம்முடைய வளம் நமக்கே என்கிற உணர்வு வருகிறது. ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு, தேச ஒற்றுமை என பேசுகிறார்கள்.. அப்படி பேசுகிறவர்கள்தான் இந்த சிக்கல்களைத் தீர்க்க வேண்டும். பகை நாடுகளாக இருக்கிற இந்தியாவும் பாகிஸ்தானும் சிந்து நதியை பகிர்ந்து கொள்கின்றன. சிந்து நதியில் 80% பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. ஆனால் காவிரி நீரில் ஒரு சொட்டு நீரைக் கூட தரமாட்டோம் என்கின்றனர். இது இந்திய இறையாண்மைக்கும் தேச ஒற்றுமைக்கும் எதிரானது என்பதை ஆட்சியாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+