காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்... சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் நாம் தமிழர் கட்சியினர் பல விதமான போராட்டங்களை முன்எடுத்தனர். கண்டன பொதுக்கூட்டம், ரயில் மறியல் மற்றும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு சுங்க கட்டணம் வசூலிக்க விடாமல் போராட்டம் நடத்தினர்.
உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் போராட்ட களமாகியுள்ளது. கடந்த 3 தினங்களாக தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.

காவிரி நதிநீர் உரிமைக்கான போராட்டத்தை பல தளங்களில் பன்முகப் போராட்டமாக விரிவடைய செய்வோம். போராட்ட வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கட்டும்; களங்கள் மாறிக்கொண்டே இருக்கட்டும்; இலக்கு ஒன்றாக இருக்கட்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். பூம்புகாரில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி மறைமலைநகர் நாம் தமிழர் உறவுகள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக சோழிங்கநல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கக்கட்டணம் வசூலிக்கவிடாமல் இவர்கள் நடத்திய போராட்டத்தால் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. இதே போன்று துரைபாக்கம் சுங்கச்சாவடியையும் முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி வேலூர் மாவட்டத் தலைமை தபால் நிலையத்தை பூட்டு போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 40பேர் கைது செய்யப்பட்டனர்.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications