தண்ணீர் இல்லாததால் வாடிய பயிர்கள்... கவலையில் நாகை விவசாயிகள்!
நாகப்பட்டினத்தில் போதிய தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் வாடி வருவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நாகப்பட்டினம் : போதிய தண்ணீர் கிடைக்காததால் வளர்ந்து வந்த பயிர்கள் வாடி வருவதால் விவசாயிகள் கண்ணீர் சிந்தி வருகின்றனர். நிலத்தடி நீரும் வெகுவாகக் குறைந்துள்ளதால் மானியம் மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், நாகை மாவட்டத்தில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு போர்வெல் மானியம் வழங்க வேண்டும்.

நெல் உற்பத்தி செலவு அதிகரித்துவிட்டதால் நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2500ஆக உயர்த்த வேண்டும். தண்ணீர் இல்லாமல் கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 6 மாதமாக புதிய மின் இணைப்பு கொடுக்கவில்லை என்றும் மின் இணைப்பு கொடுத்திருந்தால் பயிரை காப்பாற்றி இருக்கலாம் என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
நாகை மாவட்டத்தில் 2016-17ம் ஆண்டுக்கான பயிர் இழப்பீடு காப்பீட்டுத்தொகை வழங்கவில்லை. பிப்ரவரி 2ம் தேதி வரை உளுந்துக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என்று கலெக்டர் பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 2 காப்பீடு நிறுவனங்கள் ஒப்பு கொள்ளவில்லை பின்னர் எப்படி அந்த அறிக்கை வெளியானது என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications