தண்ணீர் இல்லாததால் வாடிய பயிர்கள்... கவலையில் நாகை விவசாயிகள்!
நாகப்பட்டினத்தில் போதிய தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் வாடி வருவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நாகப்பட்டினம் : போதிய தண்ணீர் கிடைக்காததால் வளர்ந்து வந்த பயிர்கள் வாடி வருவதால் விவசாயிகள் கண்ணீர் சிந்தி வருகின்றனர். நிலத்தடி நீரும் வெகுவாகக் குறைந்துள்ளதால் மானியம் மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், நாகை மாவட்டத்தில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு போர்வெல் மானியம் வழங்க வேண்டும்.

நெல் உற்பத்தி செலவு அதிகரித்துவிட்டதால் நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2500ஆக உயர்த்த வேண்டும். தண்ணீர் இல்லாமல் கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 6 மாதமாக புதிய மின் இணைப்பு கொடுக்கவில்லை என்றும் மின் இணைப்பு கொடுத்திருந்தால் பயிரை காப்பாற்றி இருக்கலாம் என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
நாகை மாவட்டத்தில் 2016-17ம் ஆண்டுக்கான பயிர் இழப்பீடு காப்பீட்டுத்தொகை வழங்கவில்லை. பிப்ரவரி 2ம் தேதி வரை உளுந்துக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என்று கலெக்டர் பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 2 காப்பீடு நிறுவனங்கள் ஒப்பு கொள்ளவில்லை பின்னர் எப்படி அந்த அறிக்கை வெளியானது என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications