நாகை வன்னியர் சங்க நிர்வாகி மூர்த்தி கொலை வழக்கு – 2 பேர் கைது
நாகர்கோவில்: வன்னியர் சங்க நிர்வாகி மூர்த்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. வன்னியர் சங்க மாநில துணை தலைவராக இருந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இவரது கார் மீது வெடிகுண்டு வீசி மூர்த்தியை கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய இவ்வழக்கில் 11 பேரை செம்மனார்கோவில் போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், குமரி மாவட்ட தனிப்படை போலீசார் ஒரு வழக்கில் குற்றவாளிகளை தேடிச் சென்ற போது, நாகர்கோவிலை அடுத்த தெங்கம்புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருவர் ஒரு வீட்டில் தங்கியிருப்பதை பார்த்தனர். உடனே இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் நாகை மாவட்டம் சீர்காழி திருவெண்காடு மேட்டிருப்பு தெருவை சேர்ந்த கார்த்திகேயன், செழியன் என்பது தெரிய வந்தது.
இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் வன்னியர் சங்க நிர்வாகி மூர்த்தி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வருபவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் தேடுவதை அறிந்த இருவரும் 4 மாதங்களுக்கு முன்பே நாகர்கோவிலுக்கு தப்பி வந்துள்ளனர். இங்கு ஒரு நண்பர் மூலம் தெங்கம் புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
ஏற்கனவே இருதய நோயால் அவதிப்பட்டு வந்த கார்த்திகேயனுக்கு இங்கு உடல்நிலை பாதிக்கவே, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் தான் போலீசில் இருவரும் சிக்கி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட போலீசார் நாகை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நாகர்கோவில் வந்த நாகை தனிப்படை போலீசாரிடம் செழியன், கார்த்திகேயன் ஆகியோர் ஒப்படைக்கப்பட்டனர். இருவரையும் நாகை போலீசார் அழைத்து சென்றனர்.
வேறு வழக்கில் விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு இன்னொரு வழக்கு குற்றவாளிகள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications