மின்மயமாகும் நெல்லை- நாகர்கோவில் பயணிகள் ரயில்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை-நாகர்கோவில் பயணிகள் ரயில் மின்சார ரயிலாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

திருவனந்தபுரம் கோட்டத்தில் நெல்லை மேலப்பாளையம வரை மின்மயமாக்கும் பணிகள் முற்றிலும் முடிந்து விட்டது. மதுரை கோட்டத்திலும் இப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. நெல்லை, தூத்துக்குடி வழித்தடங்களில் மின் மயமாக்கும் பணிகள் சுமார் ரூ.1 கோடியில் செலவில் நடந்து வருகிறது.

நெல்லையிலிருந்து மணியாச்சி வரை பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. நெல்லை ரயில் நிலையததில் ஏற்கனவே இந்த பணிகள் முடிந்து விட்டன. இதை பயன்படுத்தி திருவனந்தபுரம் கோட்டம் கடந்த ஒரு ஆண்டு காலமாக சரக்கு ரயில்களை அங்கிருந்து நெல்லை வரை மின்சார ரயிலாக இயக்கி வருகிறது.

கொச்சி துறைமுகத்தில் இறக்குமதியாகும் பொருட்கள் மின்சார ரயில்கள் மூலமாக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் பயணிகள் ரயிலையும் இயக்க முயற்சி நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் நெல்லையிலிருந்து சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் முதன் முதலில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டது.

இந்த ரயில் சேவை வெற்றிக்கரமாக செயல்பட்டதை அடுத்து ஹாபா எக்ஸ்பிரஸ் ரயிலும் மின்சார ரயிலாக இயக்கப்பட்டது. இந்த ரயில் கேரளா மாநிலம் சொரனூர் வரை மின்சார ரயிலாகவும், பின்னர் டீசல்என்ஜின் பொருத்தியும் இயக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ஹாபா எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இந்த ரயிலில் மும்பை பயணிகள் விரைவாக செல்வதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக நெல்லையிலிருந்து நாகர்கோவில் செல்லும் பயணிகள் ரயிலை மின்சார ரயிலாக இயக்க திருவனந்தபுரம் கோட்டம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரை மெமூ ரயில்கள் மின் மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+