நடராஜனின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.. அஞ்சலிக்குப் பின் ஸ்டாலின் இரங்கல்
நடராஜனின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ம.நடராஜனின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கடநத் 16ஆம் தேதி முதல் உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
அவருக்கு செயற்கை சுவாச கருவிமூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை நடராஜன் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை பெசன்ட்நகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக சார்பில் அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எவ வேலு, பொன்முடி, டிஆர் பாலு உள்ளிட்டோர் நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளகளிடம் பேசிய ஸ்டாலின், ம.நடராஜனின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றார்.
திராவிட இயக்கத்தின் மீது அளவுகடந்த பற்றுக்கொண்டவராக இருந்தவர் நடராஜன். மாணவர் பருவத்தில் தமிழ் மொழிக்காக நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர் பங்கேற்றவர் என புகழாரம் சூட்டினார்.