ஓபிஎஸ் அணியில் நாவலர் நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன்!
மறைந்த நாவலர் நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன் இன்று ஓ. பன்னீர்செல்வம் அணியில் இணைந்துள்ளார்.
சென்னை: திராவிடர் இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த நாவலர் நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன் இன்று ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். ஆர்கே நகர் இடைதேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் அணியில் புதியவர்கள் வருகையால் வலுவடைந்து வருகிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியில் கூவத்தூரிலிருந்து அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தப்பிச் சென்ற கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் நேற்று இணைந்தார். இருந்தாலும் அவர் தங்கள் அணிக்கு வருவார் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறிவருகிறார்.

இந்நிலையில் முன்னாள் டிஜிபியும் இலக்கியவாதியுமான திலகவதி ஐபிஎஸ் ஒ.பன்னீ செல்வம் அணியில் இன்று இணைந்தார். ஆர்கே நகர் தொகுதி இடைதேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணியின் சார்பாக வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஓ.பன்னீர் செல்வம் அணியின் பலம் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த நாவலர் நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இன்று இணைந்தார். ஆர்கே நகர் தொகுதி தேர்தல் நெருங்கும் நிலையில் ஓபிஎஸ் அணிக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications