தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணி, பலமான கூட்டணி: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது என்று இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். வரும் 2016ஆம் சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக்கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.
விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடி சார்பிலும், பாரதிய ஜனதா சார்பிலும், என் சார்பிலும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும், பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பதில்களும்.

வலுவான கூட்டணி
கேள்வி: உங்கள் கூட்டணி எப்படி இருக்கிறது?
பதில்: தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணி. பலமான கூட்டணி.

கூட்டணி தொடருமா?
கேள்வி: சட்டசபை தேர்தலில் உங்கள் கூட்டணி தொடருமா?
பதில்: எங்கள் கூட்டணி வலுவானது என்று சொல்லி விட்டேன். எனவே இந்த கேள்விக்கு இடமே இல்லை. கூட்டணி தொடரும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழிசை சவுந்தரராஜன்
இந்தப் பேட்டியின் போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், மோகன் ராஜூலு ஆகியோர் உடன் இருந்தனர்.

சந்தேகம் தீர்ந்தது
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமகவின் அன்புமணி ராமதாஸ், பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் ஆகியோர், தமிழகத்தில் கூட்டணி நீடிக்கிறதா என்பதை பாஜக விளக்கவேண்டும் என்று சந்தேகம் எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று பேட்டியளித்துள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications