For Daily Alerts
Just In
சொந்த பந்தமெல்லாம் இவ்வளவுதானா?... கிருஷ்ணகிரியில் துயர சம்பவம்! - வீடியோ
காய்ச்சலால் இறந்தவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டால் நோய்த்தொற்று ஏற்படும் என பயந்து உறவினர்கள் யாரும் இறுதிச்சடங்கிற்கு வரவில்லை.
கிருஷ்ணகிரி: காய்ச்சலால் இறந்தவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டால் நோய் தொற்றிக்கொள்ளும் என பயந்து உறவினர்கள் யாரும் வருகை தராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியை அடுத்த ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் சங்கர். சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சங்கர் மரணம் அடைந்தார். இந்நிலையில் சங்கர் மரணச் செய்தியை உறவினர்களுக்கு தெரிவித்தனர்.
ஆனால் பெரும்பாலான உறவினர்கள் காய்ச்சலால் இறந்தவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டால் தங்களுக்கும் காய்ச்சல் தொற்றிக்கொள்ளும் என்று பயந்து வரவில்லை. இதனால் சங்கரின் குடும்பத்தார் மனம் உடைந்துபோயுள்ளனர்.
Comments
English summary
In Uthangarai relatives not come for for the funeral of a man who died in fever. They believed that fever may affect them if they participate iun funeral
Story first published: Monday, October 9, 2017, 17:00 [IST]