”கொலைகள் ராஜ்ஜியம் நெல்லை” – தொடரும் கொலைகளைத் தடுக்க டிஜிபி அதிரடி உத்தரவு
நெல்லை: நெல்லையில் சாதி ரீதியாக தொடரும் கொலைகளை இனியும் அனுமதிக்க கூடாது என டிஜிபி புதிய போலீஸ் அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தென் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சாதி கொலைகள் அடிக்கடி அரஙகேறி வருகின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 25க்கும் மேற்பட்டோர் ஜாதி மோதல்களால் கொல்லப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ச்சியாக நடந்து வரும் கொலைகளால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். போலீசாரும் தூக்கத்தை தொலைத்து விட்டு தவித்து வருகின்றனர்.

இந்த கொலைகளால் தொடர்ந்து சாலை மறியல், பஸ்கள் மீது கல்வீச்சு, கொலை செய்யப்பட்டவர்கள் உடலை வாங்காமல் உறவினர் போராட்டம் என தினம் தினம் நடந்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜாதி மோதல்களை போலீசார் தடுக்க தவறி விட்டதாகவும், உளவு பிரிவினர் ஒருதலைபட்சமாக நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பழைய அதிகாரிகளான நெல்லை டி.ஐ.ஜி சுமித் சரண், எஸ்பி நரேந்திரன் நாயர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்வதற்காக டிஜிபி அசோக்குமார் சென்னையிலிருந்து விமானம் மூலம் நெல்லைக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம், " ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரை ஒழிக்க கடும நடவடிக்கை எடுக்கப்படும். முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
பழைய குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் போலீசாருக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள போலீசாரின் குறைகள், கருத்துகள் குறித்து கேட்டறிந்துள்ளேன்.
அவர்களின் குறைகள் விரைவில்களையப்படும். விரைவில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருவோம். யாருக்கும் பாகுபாடு காட்ட கூடாது என கண்டிப்பாக உத்தரவு இட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications