”கொலைகள் ராஜ்ஜியம் நெல்லை” – தொடரும் கொலைகளைத் தடுக்க டிஜிபி அதிரடி உத்தரவு
நெல்லை: நெல்லையில் சாதி ரீதியாக தொடரும் கொலைகளை இனியும் அனுமதிக்க கூடாது என டிஜிபி புதிய போலீஸ் அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தென் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சாதி கொலைகள் அடிக்கடி அரஙகேறி வருகின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 25க்கும் மேற்பட்டோர் ஜாதி மோதல்களால் கொல்லப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ச்சியாக நடந்து வரும் கொலைகளால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். போலீசாரும் தூக்கத்தை தொலைத்து விட்டு தவித்து வருகின்றனர்.

இந்த கொலைகளால் தொடர்ந்து சாலை மறியல், பஸ்கள் மீது கல்வீச்சு, கொலை செய்யப்பட்டவர்கள் உடலை வாங்காமல் உறவினர் போராட்டம் என தினம் தினம் நடந்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜாதி மோதல்களை போலீசார் தடுக்க தவறி விட்டதாகவும், உளவு பிரிவினர் ஒருதலைபட்சமாக நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பழைய அதிகாரிகளான நெல்லை டி.ஐ.ஜி சுமித் சரண், எஸ்பி நரேந்திரன் நாயர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்வதற்காக டிஜிபி அசோக்குமார் சென்னையிலிருந்து விமானம் மூலம் நெல்லைக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம், " ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரை ஒழிக்க கடும நடவடிக்கை எடுக்கப்படும். முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
பழைய குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் போலீசாருக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள போலீசாரின் குறைகள், கருத்துகள் குறித்து கேட்டறிந்துள்ளேன்.
அவர்களின் குறைகள் விரைவில்களையப்படும். விரைவில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருவோம். யாருக்கும் பாகுபாடு காட்ட கூடாது என கண்டிப்பாக உத்தரவு இட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications