தீக்குளித்து மரணமடைந்த இசக்கிமுத்து உடலை வாங்க மறுத்து மறியல்- 8 பேர் கைது
நெல்லை: நெல்லையில் தீக்குளித்து உயிரிழந்த இசக்கியின் தந்தை, தம்பி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கந்து வட்டி கொடுமை காரணமாக திங்கள் கிழமை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். இசக்கிமுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு நியாயம் கிடைக்காமல் சடலத்தை வாங்கப்போவதில்லை என்று உறவினர்கள் கூறினர்.
இசக்கிமுத்துவின் இறப்பு சான்றிதழில் கையெழுத்திட அவரது தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார். இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என தந்தை குற்றம்சாட்டினார்.
இதனிடையே இசக்கி முத்து ஆடம்பரமாக வாழவே கடன்வாங்கியதாக காவல்துறையினர் கூறவே
காவல்துறையைக் கண்டித்து மறியல் நடத்தினர். இதனையடுத்து இசக்கியின் தந்தை பலவேசம், தம்பி கோபி கைது செய்யப்பட்டனர். மேலும் சாலை மறியல் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications