இடிந்தகரையில் நேற்றும் நாட்டு வெடிகுண்டு வீச்சு - அதிரடி சோதனை நடத்த போலீசார் முடிவு!
நெல்லை: இடிந்தகரையில் 3வது நாளாக நேற்றும் நாட்டு வெடிகுண்ட்கள் வீசப்பட்டன. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டம் இடிந்தகரை ஊர் கமிட்டி தலைவர் அகஸ்டின். இவர் தலைமையிலான ஊர் கமிட்டியினர் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவினருடன் சேர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஊர் கட்டுபாட்டை மீறியதாக கூறி சிலர் ஊர் கமிட்டியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இது தொடர்பாக இடிந்தகரையை சேர்ந்த கபூருக்கும், ஊர் கமிட்டியினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி இரவு இடிந்தகரையில் அடுத்தடுத்து 5 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன.
இதில் இடிந்தகரையில் இருந்த ஒரு வீட்டின் கதவு, ஜன்னல் சேதமடைந்தன. மேலும் இரு கார்களின் கண்ணாடிகள் உடைந்தன. இதை தொடர்ந்து வள்ளியூர் டிஎஸ்பி பாலாஜி தலைமையில் கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அங்கு சமாதான கூட்டம் நடந்தது. இதில் மீனவர் சங்கத்தினர், ஊர் மக்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் இடிந்தகரையில் உள்ள ஐஸ் பாக்டரி அருகே 3 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக கூடங்குளம் போலீசில் இடிந்தகரையை சேர்ந்த ஜேரோபியா, ஆனந்தி, ஜேரோணி, அந்தோணி உள்பட 5 பேர் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக இரு கோஷ்டியை சேர்ந்த 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இடிந்தகரையில் மூன்றாவது நாளாக நேற்றும் குண்டுகள் வெடித்தன. இதனால் அங்கு மறுபடியும் பதற்றம் உருவாகியுள்ளது.
அடுத்தடுத்த ஏற்பட்ட குண்டு வெடிப்பை தொடர்ந்து எஸ்பி தலைமையில் அங்கு அதிரடி சோதனை போட போலீசார் தயாராகி வருகின்றனர். போலீசாரின் இந்த சோதனை முடிவு மேலும் அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications