நெல்லையில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் - பொதுமக்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் சிறுமி ஒருவர் டெங்கு காயச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள தாளாளர் குளத்தில் கடந்த மாதம் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதில் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அடுத்தடுத்து பலியாகினர். இதனால் அங்கு சுகாதார துறையினர் போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Nellai: Public panic of dengue

இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பரவி வருகிறது. நெல்லை மாநரிலும் இதன் தாக்கம் தலை தூக்கியுள்ளது. மாநகராட்.சிக்கு உட்பட்ட கரையிருப்பு ஆர்எஸ்ஓ புரம் நகரில் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதில் கணேசன் மகள் சுகன்யா என்ற சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் சிறுமிக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் உடனடியாக டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவல் கிடைத்ததும் சுகாதார அலுவலர் டாக்டர் ராம் கணேஷ், மேயர் புவனேஸ்வரி, உதவி ஆணையர் சாமுவேல் பொன்ராஜ் உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் ஆர்எஸ்ஓ புரம் விரைந்தனர். அங்கு வேறு யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என்று ஆய்வு நடத்தினர்.

மேலும் அங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்களிடம் டெங்கு பீதி ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+