எச். ராஜா பேசியதில் தப்பே இல்லை.. மக்கள் சொல்கிறார்கள்!
சிறை அதிகாரிகளை எச்.ராஜா பேசியதில் தவறு கிடையாது என கருத்துக்கள் பரவி வருகின்றன.
Recommended Video

சென்னை: "இப்படியா சிறைக்குள் பிரியாணி செய்து சாப்பிடுவது? அப்போ எச்.ராஜா பேசியதில் தப்பே கிடையாது" என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு புழல் சிறையில் கைதிகள் சொர்க்க வாழ்க்கை செல்போன் படங்கள் மூலமாக வெளி உலகுக்கு தெரிந்து பரபரப்பானது.
[ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல் டீசல் விலை.. வாகன ஓட்டிகள் கலக்கம்!]

சர்ச்சை பேச்சு
இதனால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். அந்த சமயத்தில்தான் திருமயம் அருகே நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சம்பவத்தில் எச்.ராஜா போலீசாரிடம் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

யோக்கியதை தெரியுதே
அதில் எச்.ராஜா பல்வேறு விஷயங்களை காரசாரமாக பேசியிருந்தாலும், அதில் ஒன்று புழல் சிறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேச்சு. "முதல்ல நீங்கள் எல்லாம் நீதிமன்றத்தை மதிக்கிறீங்களா? எப்படி மதிக்கிறீங்கன்னுதான் உங்கள் யோக்கியதை தெரியுதே, எல்லாம் ஊழல்.. எங்கும் ஊழல்.." என்று ஆவேசமாக பேசினார்.

பிரியாணி வீடியோ
இதனை தொடர்ந்து, நீதிமன்றம், போலீசாரை அவமதித்துவிட்டதாக வழக்குகளும் எச்.ராஜா மீது செய்யப்பட்டன. அவரும் தொடர்ந்து "தலைமறைவாக" இருக்கிறார்.. அவரை தனிப்படை போலீஸார் வலை வீசி "தேடி"யும் வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிறைக்குள் கைதிகள் பிரியாணி செய்யும் வீடியோ வைரலானது. இதனை கண்ட நெட்டிசன்கள் நேற்று முதல் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவான கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

வாதம் சரிதானே
"எச்.ராஜா கேட்டதில் தப்பே இல்லை... இதைத்தானே அன்று அவர் பேசினார். இப்போது தெரிந்துவிட்டதாக சிறை வண்டவாளம், அவர் ஒன்றும் இல்லாததை கூறவில்லையே" என்று சரமாரியாக பதிவிட்டு வருகிறார்கள். இவர்களில் 99 சதவீதம் பேர் பாஜகவினராகவே இருக்கக் கூடும் என்பது வேறு விஷயம்.
சிறைத்துறை வாதம் சரி... ஆனால் நீதிமன்றத்தை எச்.ராஜா பேசியது தவறுதானே சார்மார்களே!!












Click it and Unblock the Notifications