ஆத்திகத்தை அவமதிக்க நாத்திகர் தேவையில்லை ஆத்திகரே போதும் போல.. நெட்டிசன்ஸ் வேதனை
மயிலாடுதுறை அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் குவிந்து வருகின்றன.
மயிலாடுதுறை: அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் குவிந்து வருகின்றன.
மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோவில் அபயாம்பிகை அம்மனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை குருக்கள் சுடிதார் அலங்காரம் செய்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதோ பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுடிதார் அலங்காரம் செய்த 2 குருக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
|
இதிகாச கால உடையா?
அம்மனுக்கு சுடிதார் போட்டு அலங்காரம் செய்த பூசாரி சஸ்பெண்ட்!
#அப்ப ஜாக்கெட் மட்டும் இதிகாச கால உடையா?
|
புது மாடல் கிழிந்த ஜீன்ஸ்
மாயூரநாதர் கோவிலில்
அம்மனுக்கு சுடிதார்
அலங்காரம் 2 குருக்கள் நீக்கம்-செய்தி
#நல்ல வேளை குருக்கள் அம்மனுக்கு அந்த புது மாடல் கிழிந்த ஜீன்ஸ் சர்ட் போட்டு அலங்காரம் பண்ணல
|
எங்க போய் முடிய போகுதோ !!!
அம்மனுக்கு சுடிதார்...
பரபரப்புக்கு வேண்டி என்னவெல்லாம் செய்யுரானுக...
எங்க போய் முடிய போகுதோ !!!
|
ஆத்திகரே போதும் போல
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அணிவித்து அலங்கோல அலங்காரம்
# ஏன் அந்த நைட்டி, கவுனுலாம் கிடைக்கலையாப்பா ஆத்திகத்தை அவமதிக்க நாத்திகர் தேவையில்லை ஆத்திகரே போதும் போல












Click it and Unblock the Notifications