பிறந்த பச்சிளம் குழந்தையை பஸ் ஸ்டாண்ட்டில் வீசிச் சென்ற தாயால் பரபரப்பு!
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டத்தில் பேருந்து நிலையம் ஒன்றில் பிறந்த பச்சைக் குழந்தையை வீசிச் சென்ற தாயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இன்று முள்புதரில் பிறந்த சில நிமிடங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு இருந்த பயணிகளால் அக் குழந்தை மீட்கப்பட்டது.
பின்னர் அந்த குழந்தை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடனே பேருந்து நிலையத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை பெற்றெடுத்த பெண்ணையும் கண்டுபிடித்து அந்த பெண்ணை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கணவனை இழந்த அந்தப் பெண் ஜெயங்கொண்டத்தை அடுத்த அயன்தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் உறவினர் ஒருவருடன் வைத்திருந்த தொடர்பால் கர்ப்பமடைந்தார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வழக்கமாக பெண் சிசுக்களைத்தான் இப்படி வீசுவார்கள். இப்போது ஆண் சிசுக்களையும் வீச ஆரம்பித்திருப்பது சமூகக் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.