வெள்ள மீட்பில் ஈடுபட்டதா ஆர்.எஸ்.எஸ்?- கொதிக்க வைத்த ஃபோட்டாஷாப் படம்
சென்னை மழைவெள்ள மீட்பில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டதாக வெளியான புகைப்படத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உதவுவதாக வெளியான புகைப்படத்தால் கொந்தளிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். காஷ்மீர் வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் போலியாக பதிவிடுவதாக கொந்தளிக்கின்றனர்.
வடகிழக்குப் பருவமழையைவிடவும் வாட்ஸ்அப் மூலம் பரவும் வதந்திகளால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 2015-ம் ஆண்டு வெள்ள பாதிப்பு நிவாரண எண்களை எல்லாம் தற்போது வெளியிட்டு தகவல் பரப்புகின்றனர்.

இதனால், சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். தினம்தோறும் வருகின்ற நூற்றுக்கணக்கான அழைப்புகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய பா.ஜ.க நிர்வாகிகள் தகவல் ஒன்றை வெளியிட்டனர். மழை பாதிப்பு மீட்பு பணிகளில் ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள் ஈடுபடும் படத்தை வெளியிட்டு, சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதிபலன் பாராமல் சேவை செய்யும் ஸ்வயம் சேவகர்கள்! ஜெய் ஸ்ரீ ராம்' என பெருமிதப்பட்டுக் கொண்டனர்.
இந்தத் தகவலை பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் ஷேர் செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், இதுபோன்ற தேவையற்ற செய்திகளைப் பரப்பாமல் இருப்பதே மக்களுக்கு செய்யக்கூடிய மிகப் பெரிய சேவையாக இருக்கும். சென்னையில் தற்போது பெய்து வரும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதிபலன் பாரா சேவை எனப் புகழ்ந்து தள்ளியுள்ளனர். ஆனால், இவர்கள் பதிவிட்டுள்ள படம் காஷ்மீர் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது. காஷ்மீரை சென்னையாக உருமாற்றியுள்ளனர். காஷ்மீரில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்கள் யாரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இதுபோன்ற செய்திகள் மூலம் மக்கள் மனதில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவையை வெளிக்காட்ட முயல்கின்றனர். இதனால் அவர்களுக்குக் கெட்ட பெயர்தான் ஏற்படுமே தவிர, மக்கள் மனதில் நல்ல எண்ணத்தை உருவாக்காது என்றார் ஆதங்கத்துடன்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஒருவர், வெள்ள மீட்புப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுவதாக யாரோ ஒருவர் வெளியிட்ட புகைப்படத்தை, நாங்கள் வெளியிட்டதாகப் பரப்புகின்றனர். இப்படியொரு சேவையில் ஈடுபட்டால், அதை நாங்கள் விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டோம். எங்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்தப் படமும் வெளியாகவில்லை என்கின்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications